இந்தியப் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனை செய்ய இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த 5ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தற்போது தேறி வருவதாக அவரது மகள் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடல்நலம் தேற கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட இயக்குநர் பாரதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
அதற்கமைய நாளை மாலை 6 மணிக்கு வீடுகளில் அமர்ந்து திரையுலக பிரமுகர்கள் பிரார்த்தனை செய்யுமாறும் எஸ்.பி.பி.யின் பாடல்களை பாடி பிரார்த்தனை செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.