Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிகரம் தொட்ட பெண்கள் விருது பெறுகின்றார் சுரேஜினி புஷ்பசுதன்

சிகரம் தொட்ட பெண்கள் விருது பெறுகின்றார் சுரேஜினி புஷ்பசுதன்

1 minutes read

அகில இலங்கை தமிழ் அழகுச் சிகிச்சை நிபுணர்கள் சம்மேளனம் வருடம்தோறும் சிறந்த ஆற்றல் உள்ள பெண்களுக்கு சிகரம் தொட்ட பெண்கள் விருதுவழங்கி மதிப்பளிக்கின்றார்கள். இந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான விருதுபெறும் சாதனைப் பெண்களை அறிவித்துவருகின்றார்கள்.

யாழ் மாவட்டத்தின் இளம் முன்னணி அழகுக்கலை நிபுணர் தியாகராஜா சுரேஜினி புஷ்பசுதன் அவர்களுக்கு இவ்வாண்டுக்கான விருதினை வழங்க உள்ளதாக சம்மேளனம் அறிவித்துள்ளது. புங்குடுதீவைப்

பிறப்பிடமாகக் கொண்ட இவர் Perfect Look Beauty Parlour என்னும் நிறுவனத்தின் உரிமையாளராவார். அத்துடன் இவர் சரும சிகிச்சையாளர், ஒப்பனையாளர் மற்றும் கேசச்சிகிச்சையாளர் என மூன்று துறைகளிலும் தொழில்சார் தகைமையுடன் தனது உழைப்பால் உயர்ந்து தன்னை மிக நிதானமாக வளர்த்து வருபவரென இவரின் வெற்றி பயணத்தினைப் பாராட்டி கெளரவப்படுத்துவதாக சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளது.

இவரது திறமைகளை மேலும் வலுப்படுத்தி வளர்க்கும் விதமாக இவரது முயற்சிகளுக்கு இந்த விருது பெருமைசேர்க உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More