Wednesday, April 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கவிதை | அஞ்சற்க மனிதா | பா.உதயன்

கவிதை | அஞ்சற்க மனிதா | பா.உதயன்

0 minutes read

இருண்டு கிடக்கும் உலகம்
மெளனங்களோடு மட்டும்
பேசிக்கொண்டிருக்கிறது
அதன் அழகிய மொழிகளை
தொலைத்து விட்டு

ஒளிந்து கொள்ள இடம் தேடியபடி
மனிதன் அலைகிறான்
அவன் இசைத்த பாடல்களை எல்லாம்
திண்டு கொண்டிருக்கின்றன
கண்ணுக்கு தெரியாத வைரசுகள்

பறவைகள் பாடவில்லை
பூக்கள் பூக்கவில்லை
காலை ஒரு கணம் விடிய மறந்தது
காலம் தெரியாமலே
மரங்களில் இருந்து
ஒவ்வொரு இலையாக
உதிர்ந்து கொண்டிருக்கிறது

மனிதனின் அழகிய வாழ்வை
ஏதோவொன்று பறித்து செல்கிறது
ஊழிக்கூத்தின் உச்சத்தின் மத்தியிலும்
உலகம் தவம் இருக்கிறது
உயிர்ப் பிச்சை கேட்டபடி

இருந்தபோதிலும் அஞ்சற்க மனிதா
நீ தோற்று விழ விடமாட்டேனென
பூமியின் தோளில் வந்து அமர்ந்தபடி
பாடிக்கொண்டிருக்கிறது காடும் மலையும்
காற்றும் கடலும்.

பா.உதயன்

25/03/2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More