கடவுள்
என் கனவில் வந்தார்
எப்படி இருக்கிறது
பூமி என்றார்
உங்களுக்கு தெரியாத
என்று கேட்டேன்
வேலைப் பழு
எல்லாவற்றையும் கவனிக்க
முடியவில்லை என்றார்
என்னிலும் கொஞ்சம்
கோபமாகத்தான் இருந்தார்
ஏதோ தேவைக்காய்
அவரிடம் அடிக்கடி
போய் வந்தேன்
எல்லாமே வந்த பின்
அவரையும் மறந்தேன்
இருந்தபோதும்
அனைத்தும் அறிவார்
எவன் கள்ளன்
எவன் நல்லவனென
மனிதர்கள் மனிதர்களாக
இல்லை என்றேன்
மானிடத்தை ஏன்
கொன்றீர்கள் என்றேன்
தான் இல்லை
அது நீங்களே என்றார்
அழிவுகள் தொடர்ந்து கொண்டே
போகிறதே என்ன செய்வதாய்
உத்தேசம் என்றேன்
கட்டுக்கு அடங்காமல்
போய் விட்டது அதிகாரம்
என் கைகளை விட்டு என்றார்
மதமும் மதமும் மோதுகிறது
அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறதே
சிறுபான்மை இனத்தை
பெரும்பான்மை இனம் வெருட்டுகிறது
மனிதனும் மனிதனும் மோதுகின்றான்
நோயும் பிணியும் தின்கிறது
என்ன செய்யப் போகின்றீர்கள் என்றேன்
அமைதித் தூதுவர் ஒருவரை
அனுப்பி வைக்கிறேன் என்றார்
அவரையும் இவர்கள்
கொல்ல மாட்டார்களா என்றேன்
அமைதி மீண்டும்
வரவில்லையானால்
உங்கள் அழிவை தவிர
வேறு வளி இல்லை என்றார்
அவசரமாக திரும்ப
வேண்டும் என்றார்
ஆயிரம் வேலை
இருக்கு என்றார்
இதை விட வேறு என்ன
பிதாவே என்றேன்
உனக்கு இருப்பது ஒருலகு
எனக்கு இருப்பது
ஏழுலகம் என்றார்
நல்லவர்களுக்கு காலம்
இல்லை என்றேன்
எல்லாமே அவர் அவர்
விதிப்படி என்று
அதட்டிப் போட்டு
போய்விட்டார்
காலைச் சேவல் கூவி
கனவு கலைந்து
கண் முழித்து பார்க்க
காலையில் செய்தி வந்தது
கறுப்புச் சிறுவன் ஒருவனை
வெள்ளையர்கள் கொன்றதாகவும்
கடவுளின் பெயரால்
காலையில் ஒரு குண்டு வெடித்து
மனிதம் இறந்ததாகவும்
ஐயோ
நாளையும் கடவுள்
கனவில் வந்தால்
என்ன செய்வதாய்
உத்தேசம் என்று கேட்பேன்.
பா.உதயன் ✍️