Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் கடவுள் என் கனவில் வந்தார் | பா.உதயன்

கடவுள் என் கனவில் வந்தார் | பா.உதயன்

1 minutes read

கடவுள்
என் கனவில் வந்தார்
எப்படி இருக்கிறது
பூமி என்றார்

உங்களுக்கு தெரியாத
என்று கேட்டேன்
வேலைப் பழு
எல்லாவற்றையும் கவனிக்க
முடியவில்லை என்றார்

என்னிலும் கொஞ்சம்
கோபமாகத்தான் இருந்தார்
ஏதோ தேவைக்காய்
அவரிடம் அடிக்கடி
போய் வந்தேன்

எல்லாமே வந்த பின்
அவரையும் மறந்தேன்
இருந்தபோதும்
அனைத்தும் அறிவார்
எவன் கள்ளன்
எவன் நல்லவனென

மனிதர்கள் மனிதர்களாக
இல்லை என்றேன்
மானிடத்தை ஏன்
கொன்றீர்கள் என்றேன்
தான் இல்லை
அது நீங்களே என்றார்

அழிவுகள் தொடர்ந்து கொண்டே
போகிறதே என்ன செய்வதாய்
உத்தேசம் என்றேன்

கட்டுக்கு அடங்காமல்
போய் விட்டது அதிகாரம்
என் கைகளை விட்டு என்றார்

மதமும் மதமும் மோதுகிறது
அதிகாரமும் அதிகாரமும் மோதுகிறதே
சிறுபான்மை இனத்தை
பெரும்பான்மை இனம் வெருட்டுகிறது
மனிதனும் மனிதனும் மோதுகின்றான்
நோயும் பிணியும் தின்கிறது
என்ன செய்யப் போகின்றீர்கள் என்றேன்

அமைதித் தூதுவர் ஒருவரை
அனுப்பி வைக்கிறேன் என்றார்
அவரையும் இவர்கள்
கொல்ல மாட்டார்களா என்றேன்

அமைதி மீண்டும்
வரவில்லையானால்
உங்கள் அழிவை தவிர
வேறு வளி இல்லை என்றார்

அவசரமாக திரும்ப
வேண்டும் என்றார்
ஆயிரம் வேலை
இருக்கு என்றார்
இதை விட வேறு என்ன
பிதாவே என்றேன்

உனக்கு இருப்பது ஒருலகு
எனக்கு இருப்பது
ஏழுலகம் என்றார்

நல்லவர்களுக்கு காலம்
இல்லை என்றேன்
எல்லாமே அவர் அவர்
விதிப்படி என்று
அதட்டிப் போட்டு
போய்விட்டார்

காலைச் சேவல் கூவி
கனவு கலைந்து
கண் முழித்து பார்க்க
காலையில் செய்தி வந்தது

கறுப்புச் சிறுவன் ஒருவனை
வெள்ளையர்கள் கொன்றதாகவும்
கடவுளின் பெயரால்
காலையில் ஒரு குண்டு வெடித்து
மனிதம் இறந்ததாகவும்

ஐயோ
நாளையும் கடவுள்
கனவில் வந்தால்
என்ன செய்வதாய்
உத்தேசம் என்று கேட்பேன்.

பா.உதயன் ✍️

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More