0
கண்ணிலே தூசி என்றால்
கைகள்
வழக்கு வைத்து
கூட்டம் வைத்து
கடிதம் எழுதி
காத்திருப்பதில்லை
இங்கோ
வாழும் வயதில்
உண்ணா நோன்பிருந்து
வாழ்வையே தந்தவன் நினைவெழுத
மறுத்தவன் வாசலில் காத்திருப்பு
இன்று
அவகாசமும் முடிந்தது
வசதியாய் ,ஒதுக்கமாய்
நேர வரையறையுடன்
உண்ணா நோன்பு
போராட்ட அறை கூவல்
கூடவே வழமைபோல்
போட்டி போட்டு அறிக்கைக் கூவல்
’மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்றபடி
மறைந்தவனுக்கு முன்னரேயே
மரணித்துப் போனோமா…
அனுமதி அவசியமில்லை
எங்களுக்காய் அஞ்சலிப்போம்!
– நகுலேசன்