வடமாகாண-பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நூல் வெளியீட்டுத் திட்டத்தின் கீழ், தமிழ் சிரேஷ்ட விரிவுரையாளர் ஈ.குமரன்-கலாசார உத்தியோகத்தர் செ.தக்சாயினி ஆகியோரால் தொகுக்கப்பட்ட ‘சாந்தன் படைப்புலகம்’ நூல் வெளியீட்டுவைபவம் இந்நாள் சுகாதார அறிவுறுத்தலுக்குஅமைய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப் பாளர் திருமதி சுஜீவா சிவதாஸ் தலைமையில் கல்விஅமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
நூல் அறிமுக உரையை யாழ்ப்பாணபல்கலைக்கழக முன்னால் துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன் நிகழ்த்தினார்.
முதல் பிரதியை பிரதம விருந்தினர் ,கல்வி அமைச்சின் செயலாலர் திரு இ.இளங்கோவனிடமிருந்து மூத்த தமிழ்ப் பேராசிரியர் அ.சண்முகதாஸ் பெற்றுக்கொண்டார்.