மானுறங்கும் மன்மத மேடை தனில் கட்டியணைத்திட புணரும் கார்குழலால்
காகிதமெழுதிய கன்னமும் சீண்டும்
கருவிழியால் ஒற்றை பட்டில் ஒய்யார
வேட்கை
தணியாத தாகமாய் புல்வெளி மார்பில்
ஒட்டியே உறவாடும் ஓரிதழ்
பொழுதாய்
மாசற்ற மனதுடன் சூடிய பூவும் சொரிந்திடும்
நன்நிலா பொழுது
பட்டு பூச்சியின் தியாகம் கலைந்த பட்டாடையும்
பருவமிழந்து தவித்தது
கைகளை நீவி பொன்னிதழ் நீட்சமாய்
ரீங்காரமிடும் வண்டும்
மொய்த்தது
பருகிய வெறிகொண்டு சுபீட்ஷ பெருவெள்ளமாய்
பாலைவன முற்றத்தில் படர்ந்து
சென்றது மதி கெட்ட
நள்ளிரவாய்…..
கேசுதன்