Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா அவள் கவிதை | கவிதை | சகாய டர்சியூஸ் பீ

அவள் கவிதை | கவிதை | சகாய டர்சியூஸ் பீ

1 minutes read

கற்பனையில் எழுதா காவியம்
தூரிகையில் வரையா ஓவியம்
சிற்பத்தில் காணா அழகியல்
என் விழிகளின் தேடலில்
இதயத்தில் விழ
எழுந்தாள் காதலாய் …

நிலவின் ஒளியில்
தோளில் முகம் சாய்த்து
கைவிரல் பிடித்து கடற்மணலில்
அவள் வரைந்த வரிகள்
இதயத்தில் கல்வெட்டாக…

வாடையின் குளுமையில்
காதோரம் அவள் படித்த
வார்த்தைகள்
நெஞ்சை அள்ளித்
தின்னும் இலக்கியமாக….

உதடும் உதடும் உண்ணாது
இமைப்பொழுதில்
பதிந்த அவளின் முத்தங்கள்
நரம்பினில் பாய்ந்து உணர்வில் புகுந்து
என்னுயிரோடு அவளை பிணைக்க…

ஆர்கலி எண்ணங்கள்
அவளின் நீச்சல் குளமாக
பொங்கி எழும்
காதல் அலைகள்
காகிதங்களை நனைக்க…

அரும்பும்
ஒவ்வொரு கவிதையிலும்
அவளே பூக்கிறாள்!

– சகாய டர்சியூஸ் பீ

நன்றி : எழுத்து.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More