ஆப்பிள் என்றதும் எல்லோருக்கும் சிவப்பு நிற ஆப்பிள்தான் நினைவுக்கு வரும்.சிவப்பு நிற ஆப்பிளையே அதிகம் ருசித்து சுவைப்பவர்கள் பெரும்பாலும் பச்சை நிற ஆப்பிளை பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஆனால் சிவப்பு நிற ஆப்பிளைக் காட்டிலும் இவற்றில் அதிக இனிப்பும் சற்று புளிப்பும் நிறைந்திருக்கிறது. இயற்கை தந்த மருத்துவ குணங்கள் நிறைந்த பழத் தில் பச்சை ஆப்பிளுக்கு தனி இடம் உண்டு.சத்துமிக்க ஆப் பிளை தினம் ஒன்று எடுத்துகொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய தேவை இருக்காது என் பதை மருத்துவர்களே வலியுறுத்துகிறார்கள்.
இதன் நன்மைகளை பார்ப்போம்
பச்சை ஆப்பிளில் இயற்கையாகவே அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இவை குடலின் இயக்கத் தைச் சீராக்குகின்றன. உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த பச்சை ஆப்பிள் உதவு கிறது.குறிப்பாக இந்த பச்சை ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது.உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை நீக்குவதில் மிகச்சிறப்பாக செயலாற்றுகிறது.
இதில் கால்சி யம், மெக்னீசியம், பாஸ்பரஸ், தாமிரம் போன்ற தாதுப்பொருள்கள் நிறைந்திருக்கின்றன.இது வயிற்றில் இருக்கும் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. குடலின் இயக்கத்தைத் தடையில்லாமல் செய்ய தூண்டுகிறது.
இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடெண்ட் குடலில் தங்கும் கிருமிகளை வெளியேற்றி குடலை பலப்படுத்துகிறது. இதனால் குடல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
உடலில் இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் கொழுப்புகளை வெளியேற்றுகிறது. பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பை குறைத்து இதயத்துக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.
வயதான பிறகு உண்டாகும் நரம்பியல் கோளாறுகள், அல்சைமர் என்னும் மறதி நோயை உண்டாவ தைத் தடுக்கிறது.
வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த பச்சை ஆப்பிளை பெண்கள் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.
சரும நோய்கள் வராமல் தடுக்கிறது. வைட்டமின் குறைபாடுகளால் உண்டாகும் சரும பிரச்சனை, சரும பாதிப்புகளை உண்டாக்கிவிடும். இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட தினம் ஒரு பச்சை ஆப்பிள் போதும் என்கிறார்கள் சரும பராமரிப்பு நிபுணர்கள்.
குழந்தைகள் வளர் பருவத்திலேயே இந்த பச்சை ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ஆயுள் முழுமைக்கும் நீரிழிவு பிரச்சனையை சந்திக்க மாட்டார்கள்.
இதில் இருக்கும் அதிகப்படியான வைட்டமின் ஏ சத்து உங்கள் பார்வைத்திறனை மேலும் மேம்படுத்தும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் ஆப்பிளை தினமும் எடுத்துகொண்டால் உங்கள் நுரையீரல் பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.