வடிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மழை வெள்ளம்! ஆயினும் எளிதில் வடிந்து விடப் போவதில்லை எம் உறவுகளின் துயர்..
எம் தமிழ்நாட்டின் உறவுகளின் வாழ்வினைக் கவிழ்த்துப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் வடியத் தொடங்கியிருக்கின்றது.மறுபடியும் காலநிலை மோசமடையக் கூடும் என்ற செய்திகளும் கிடைக்கப் பெறுகின்றது. ஆயினும் அவர்களின் வாழ்விடங்கள்சீராகி ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பலமாதங்கள் ஆகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அவர்களின் இன்றையஉடனடித் தேவையினை நிறைவேற்ற பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களால் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.இது அவர்களின் உடனடித் தேவையினை நிறைவு செய்யலாம். ஆயினும் இத்துடன் அவர்களின் இழப்புகள் பிரதியிடப்பட முடியாது.இனித்தான் மிகச் சவாலான அடுத்த கட்டத்திற்கு அவர்கள் நுழையவிருக்கின்றனர்இ
அன்றாடம் தொழில் செய்து வாழ்வினை துயரோடு கொண்டு நடத்தியவர்களின் உடைமைகள் மற்றும் குடிசைகள் போன்றவற்றைமொத்தமாய் வெள்ளம் அடித்துச் சென்று விட்டதுஇ கேள்விக்குறியாய் மாறியிருக்கும் அவர்களின் நாளைய வாழ்வினை சீரமைக்கும்மனிதாபிமானப் பணி புலம் பெயர்ந்து வாழும் எங்களையும் சார்ந்ததாகும். ஏனெனில் அவர்கள் எங்கள் சொந்தங்கள்இ எங்களுக்கு ஒருதீங்கு வரும் போதெல்லாம் தன்னெழுச்சியாய் எழுந்து எம்மை அரவணைத்தவர்கள். நாம் துடித்த போதெல்லாம் அவர்களும்துடித்தார்கள். ஏதிலிகளாய் நாம் அந்த மண்ணில் கால் வைத்த போதெல்லாம் பிரதியுபகாரம் எதிர்பாராது எம்மை ஆதரித்தார்கள்இபாதுகாத்தார்கள். கடல் பிரித்தாளும் உறவு பிரியவில்லை.
வீடுஇ வாசல்களை இழந்துஇ உடமைகளை இழந்துஇ உறவுகளை இழந்துஇ வாழ்வாதாரங்களை இழந்து அனாதரவாய் நாளைய வாழ்வைகேள்விக் குறியோடு எதிர் நோக்கி நிற்கும் அவர்களுக்கு கரம் கொடுப்போம். உங்கள் துணையாய் நாமிருக்கின்றோம் என்று புலம்பெயர் மக்கள் நாம் உணர்த்துவோம்.
அங்கு இடம் பெற்றது பேரிடர்! இயற்கையின் சீற்றத்தின் முன்னே நவீன தொழினுட்பம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.மின்சாரம்இ குடிநீர்இ மருத்துவம் போன்ற அனைத்து அத்தியாவசியத் தேவைகளும் வழங்கல் செய்ய முடியாது தேக்க நிலைக்குவந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணங்களும்இ வாழ்விடங்களும்இதொழிலாதாரங்களும் உடனடியாக கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஒரே நாளிலோ அல்லது ஒரே மாதத்திலோ அரசாங்கத்தினால் மாத்திரம் செய்து முடிக்கக்கூடிய பணி அல்ல. சகல வேறுபாடுகளையும் மறந்து தமிழத்தில் தன்னார்வமாக பலர் செயல்பட்டு இழப்புகளைக் குறைக்கும் மனிதாபிமானப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாமும் அவர்களுடன் கரம் கோர்த்து துயர் துடைப்புப் பணிகளில் உடனடியாகஉதவ வேண்டும்.
தமது உறவுகள் தமக்கு என்ன செய்தார்கள் என்ற ஒரு கேள்வி நாளை அவர்களிடமிருந்து வந்து விடலாகாது.
2009 மே மாதத்தின் பின் பாரிய அளவில் மக்களை ஒன்று திரட்டிஇ மக்கள் பணியாற்றும் பல முன்னணி அமைப்புகளும் பிரித்தானியதமிழர் பேரவையும் (டீவுகு) இணைந்து தமிழக மக்களுக்கு உதவிக் கரம் கொடுப்பதற்காக பாரிய செயற் திட்டமொன்றைஆரம்பித்துள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியம்இ நம்பிக்கை ஒளி (RAY OF HOPE), THE YOUTH PROJECT, SERENDIP CHILDREN’S HOME, ஒத்துழைப்பு (OTTHULAIPPU) LOTUS CARING HANDS, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு-UK (KILINOCHCHI DISTRICT PEOPLE ORGANISATION-UK), ஹில்லிங்டன் தமிழ் சமூக நிலையம் மற்றும் TAMILS FOR LABOUR, BRITISH TAMIL CONSERVATIVES, பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) போன்றஅமைப்புக்கள் இத் துயர் துடைப்பு செயற் திட்டத்தில் இணைந்து அவசர கால அடிப்படையில் செயற்படுகின்றன.
எனவே பிரித்தானிய வாழ் உறவுகள்இ தமிழ்ப் பாடசாலைகள்இ தமிழர் சமூக மையங்கள் மற்றும் உலகெங்கும் பரந்து வாழும்எம்மினிய உறவுகள் தங்களின் மேலான பங்களிப்பை இச் செயற்திட்டத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். நீங்கள்வழங்கும் நிதி உதவிகள் பற்றிய விபரங்கள் வெளிப்படைத் தன்மையுடன் கையாளப்படும். இச் செயற்திட்டத்தில் பங்குகொண்டுசெயலாற்ற அதிகமதிகமாய் தொண்டர்களையும் (ஏழுடுருNவுநுநுசுளு) எம்முடன் இப் புனித பணியில் இணைந்து கொள்ளுமாறுஅழைக்கின்றோம். சமூகப் பொறுப்புள்ள எம் மக்கள்இ இளையோர்இ நேர்மையான சமூக நிறுவனங்கள் போன்ற அனைத்துத்தரப்பினரையும் எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இப் புதியதோர் கூட்டு முயற்சி மேலும் மேலும் எம் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளுக்கான ஆரம்பமாக அமையட்டும்.
”வாருங்கள்! ஒன்றிணைந்து செயலாற்றி எம் உறவுகளின் துயர் போக்கி புது வாழ்வளிப்போம்“.
மேலதிக தொடர்புகளுக்கு:-
02088080465, 07753351773, 07956919511, 07814486074, 07404493745, 07956919511, 07730769317.
—