அவுஸ்ரேலியாவானது தற்பொழுது காட்டுத்தீ அபாயத்தை சந்தித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகின்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்சிட்னிக்கு வட மேற்கேயுள்ள சுமார் இரண்டாயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேசங்களில்புகை மூட்டம் சூழ்ந்துள்ளதுடன் சில இடங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
குவின்ஸ்லாந்து மாநிலத்திலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக ஆறு மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் 600-க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.