சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ரயில் வேலைநிறுத்தங்களால் ரயில் வலையமைப்பு முடங்கியதால் பயணிகள் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டனர்.
ரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேசிய சங்கம் (RMT) 24 மணி நேர விரைவுப் போராட்டத்தை நடத்தியதால் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நடவடிக்கை வலையமைப்பின் பெரும்பகுதியை முடக்கியதுடன், யூரோவிஷன் பாடல் போட்டிக்காக லிவர்பூலுக்கு பயணிக்க விரும்புபவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.
மேலும் வேலைநிறுத்தங்கள் மே 31 மற்றும் ஜூன் 3 இல் திட்டமிடப்பட்டுள்ளன, இது FA கோப்பை இறுதிப் போட்டியுடன் ஒத்துப்போகும்.
இந்த நிலையில், தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்தங்களுக்கு முக்கிய நிகழ்வுகளை தீவிரமாக குறிவைக்கின்றன என்று அமைச்சர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இடையூறுக்கு வருந்துவதாக தெரிவித்த RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், ஆனால் தொழிற்சங்கம் இரண்டு வாரங்களுக்கு மேலாக வேலைநிறுத்தத்தை முன்னறிவித்துள்ள நிலையில், மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய மக்களுக்கு “நிறைய நேரம்” உள்ளது என்றும் கூறினார்.