
இராணுவத்திடம் சரணடைந்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்: நிக்சன்
சர்வதேச காணாமல் போனோர் தினம்- தாங்களாக காணாமல் போகவில்லை இராணுவத்திடம் சரணடைந்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்: நிக்சன் சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைஇன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இனவழிப்பின்செயற்பாடு. குடும்பத்தலைவரைத் தொலைத்த குடும்பங்கள், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர், பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள், வாழ்க்கைத்துணையைத்தொலைத்தவர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.