September 21, 2023 12:34 pm

தமிழ்மொழி அமுலாக்கல் முயற்சிகள் வெற்றிபெறாமையால் மனவேதனை : அமைச்சர் வாசுதமிழ்மொழி அமுலாக்கல் முயற்சிகள் வெற்றிபெறாமையால் மனவேதனை : அமைச்சர் வாசு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆனையி­றவு புகை­யி­ரத நிலையப் பெயரை மாற்றி சிங்­களப் பெயர் வைப்­பது மொழி உரி­மையை மீறும் செய­லாகும். எனவே, இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன் எனத் தெரி­வித்த அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தமிழ் மொழி அமு­லாக்­கலை உறு­திப்படுத்த அனைத்து முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­கின்றேன். ஆனால், எது­வுமே வெற்­றி­பெ­ற­வில்லை. இதனால் மன­வே­த­னை­யு­ட­னேயே உள்ளேன் என்றும் அமைச்சர் தனது மனக் குமு­ற­லையும் வெளிட்டார்.

இது தொடர்­பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாட்டு அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார மேலும் தெரி­விக்­கையில்,

வெள்­ள­வத்தை தமிழ் சங்கம் அமைந்­துள்ள வீதியின் பெயரை தமிழ் சங்க வீதி­யென பெய­ரி­டு­வ­தற்­கான முயற்­சிகள் தடுக்­கப்­பட்­டன.
பின்னர் இது தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யுடன் பேசினேன். ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்­க­வுடன் பேசினேன். அவரும் இப்­பெயர் பல­கையை நிறு­வு­வது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு முத­ல­மைச்சர் பிர­சன்ன ரண­துங்­க­வுக்கு அறி­வித்தார். அவர் மாகாண செய­லா­ள­ருக்கும் அறி­வித்தார்.
ஆனால், இது தொடர்பில் கொழும்பு மாந­கர சபை தமது தீர்­மா­னத்தை தனக்கு அறி­விக்க வேண்­டு­மென தெரி­வித்தார். பின்னர் அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டேன்.
ஆனால், இன்­று­வரை நான் எடுத்த எந்த முயற்­சியும் நிறை­வே­ற­வில்லை. இது சிறி­ய­தொரு விடயம். ஆனால், ஏன் இவ்­வ­ளவு இழு­பட்டு செல்­கின்­றது என்­பது புரி­ய­வில்லை.
மீண்டும் இவ்­வி­ட­யத்தை ஜனா­தி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்­டு­ செல்வேன்.
முயற்­சியை கைவி­ட­மாட்டேன். ஆனால், தமிழ்­மொழி அமு­லாக்கல் தொடர்பில் அனைத்து முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுக்­கின்றேன். எது­வுமே நிறை­வே­று­வ­தில்லை.
இதனால் மன­வே­த­னை­யு­டன்தான் இருக்­கின்றேன். என்ன செய்­வது? ஆனால், எனது முயற்­சியை கைவி­டப்­போ­வ­தில்லை.
ஆனை­யி­றவு
ஆனை­யி­றவு புகை­யி­ரத நிலை­யத்தின் பெயரை மாற்றி சிங்­களப் பெயர் வைப்­ப­தென்­பது கடு­மை­யான மொழி உரிமை மீற­லாகும். இதனை கடு­மை­யாக எதிர்க்­கின்றேன். இதனை எதிர்த்து போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்.
ஆனால், இம்முயற்சி வெற்றி பெறுமா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்