‘ஜி77’ நாடுகளின் உச்சி மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் நடக்க உள்ளது. இம்மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே இதில் அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார். ஜி77 அமைப்பின் தற்போதைய தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான இவோ மோரேல்ஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள், ஆகியோரும் இதில கலந்து கொள்கின்றனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை இம்மாநாட்டில் ராஜபக்ஷே உரையாற்றுகிறார். அவருக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளது.