தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஆளில்லா லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளி பஸ் மீது ரயில் மோதி 17 மாணவர்கள் உயிரிழந்தனர்.பள்ளி பஸ் டிரைவரும் கிளீனரும் அதே இடத்தில் பலியாயினர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 மாணவர்கள் பலத்த காயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
