பாடசாலை மாணவர்களுக்கான வீதிப்பாதுகாப்பு 02வது கருத்தரங்கு நிகழ்வு கிளி புனித திரேசா பாடசாலையில் இன்று நடைபெற்றது.
வீதி விபத்துக்களில் இருந்து தம்மையும் சமூகத்தையும் பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து இதன் போது கருத்தாடப்பட்டது.
கிளி பீப்பிள் அமைப்பின் அனுசரனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக் கிளை, டிஎம்சி -ஸ்ரீலங்கா அமைப்பு மற்றும் இலங்கை காவல்துறையினர் ஆதரவு வழங்குகின்றனர்.