ஜப்பானில் கொரோனாத் தொற்றுக்குப் பின்னர் குழந்தைகளின் பிறப்பு விகிதமானது வெகுவாகக் குறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனால் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக, அந்நாட்டு அரசு புதிய முடிவொன்றை எடுத்துள்ளது.
அந்தவகையில், இளைய தலைமுறையினரின் வருமானத்தை அதிகரிப்பதற்காகப் பொருளாதாரம் மற்றும் சமூகத் திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இவ்வாறு செய்வதால் குறைந்த ஊதியம் பெறும் இளைஞர்களும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
இதன்மூலம் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இவ்அறிவிப்பானது, அந்நாட்டு இளைய தலைமுறையினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.