உலக ஆயர்கள் மாமன்றத்தில் முதல் முறையாக பெண்களும் வாக்களிக்க அனுமதி வழங்க போப் பிரான்சிஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ்வப்போது கூடி விவாதிக்கிறது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆயர்கள் மாமன்றக் கூட்டம் வத்திகானில் நடைபெறவுள்ளது.
இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறன. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள் மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி, அறிக்கையை அவர் வெளியிடுவார்.
இந்த ஆயர்கள் மாமன்றத்தில் ஆயர் அல்லாத 70 உறுப்பினர்களை நியமிக்க போப் பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார். இதில் அரைவாசிப் பேர் பெண்களாகவும் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாமன்றத்தில் இதுவரை ஆண்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்த நிலையில், முதல் முறையாக இந்த மாமன்றத்தில் பெண்களுக்கு வாக்களிக்க போப் பிரான்சிஸ் அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, இந்த மாமன்றத்தில் ஆயர் அல்லாத பெண் உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். அத்துடன், 5 கன்னியாஸ்திரிகள் தேர்தல் பிரதிநிதிகளாகவும் நியமிக்கப்படுவார்கள்.
போப் பிரான்சிஸ் அங்கிகரித்துள்ள இந்த திருத்தத்தை, வத்திக்கான் நேற்று வெளியிட்டுள்ளது.