ரோயல் காலேஜ் ஆஃப் நர்சிங் (RCN) தலைவர், சுகாதார செயலாளரிடம், ஊதிய பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள செவிலியர்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது, பெரும்பான்மையான சுகாதார சங்கங்கள் அரசாங்க ஊதிய சலுகையை ஏற்றுக்கொண்ட பிறகு, RCN உறுப்பினர்கள் இந்த ஒப்பந்தத்தை நிராகரித்தனர்.
இந்த நிலையில், அமைப்பின் பிரதிநிதி டைம்ஸிடம் பேசுகையில், பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு அமைச்சர்களை வலியுறுத்தினார்.
எனினும், ஊதிய சலுகை இறுதியானது என்று சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்பத்தில் 19% ஊதிய உயர்வுக்கு அழுத்தம் கொடுத்து, பின்னர் RCN தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் 5% ஊதிய சலுகையை ஏற்குமாறு Ms Cullen அழைப்பு விடுத்தார், ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில், தாதியர் சங்கம் இந்த மாத இறுதியில் அடுத்த வேலைநிறுத்த நடவடிக்கைக்கு தயாராகியுள்ளது.
மே 1 இங்கிலாந்தில் உள்ள செவிலியர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர் – தீவிர சிகிச்சை உட்பட அனைத்து பகுதிகளிலிருந்தும் RCN உறுப்பினர்கள் வெளியேறுவது இதுவே முதல் முறை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெப்ரவரி 6 மற்றும் 7 மற்றும் ஜனவரி 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் அவர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.