இந்தோனேசியாவின் கடற்கரைப் பகுதியான மொலுக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம்,தெரிவிக்கையில் இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை அதிகாலைஏற்பட்டநிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவாகியதுஇந்த நிலநடுக்கத்தின் ஆழம் 73 கி.மீ. இதன் காரணமாக அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.