யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது கனடாவில் இடம்பெற்ற பெருமளவு கார் திருட்டுக்களில் சந்தேகநபர்களாகக் கருதப்படும் இவர்கள் விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்துச்செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குறித்த இரண்டு இளைஞர்களும் பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
மேலும் பொலிசார் மேடற் கொண்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்துச் செல்லும் நிறுவனங்களுக்கிடையிலும் கடும் போட்டி நிலவுகின்றது.
குறித்த சகோதரர்கள் இருவரும் பழுது பார்க்கும் நிலையங்களுக்கு முகவர்களாக செயற்படுகின்றனர். அந்த வகையில் ஸ்கார்பரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (வயது 24), நகுல் விக்னேஸ்வரன் (வயது 30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும், அவர்கள் இழுத்துச் செல்லும் விபத்துக்குள்ளான வாகனங்களை முறையாக பழுதுபார்க்கும் இடங்களில் சேர்ப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.