ஜேர்மன் நகரம் ஒன்றில் மீன் பிடிக்கசென்ற சிறுவர்கள் சிலர் தங்கள் தூண்டிலில் சிக்கிய பொருட்களைக் கண்டு அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
நேற்று Wölfis என்ற கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் மீன் பிடிப்பதற்காகதூண்டிலில் வலிமையான காந்தங்களைப் பொருத்தில் போட்டநிலையில் தூண்டிலில் சில ஆபத்தான பொருட்கள் காணப்படுவதாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.
அங்குவந்த போலீஸ் அதிகாரிகள் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளின் துண்டுகள் மற்றும் துப்பாக்கிக் குண்டுகள் என தெரிவித்ததுடன் மீன் பிடிப்பதற்கு இவ்வாறான முறைகளை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
.