ரஷ்ய மற்றும் யுக்ரைன் ஜனாதிபதிகளுக்கு இடையில் முதலாவது நேரடிப் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
கிழக்கு யுக்ரைனில் கடந்த ஐந்தரை வருடங்களாக இடம்பெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்தப் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் அரச தலைவர்களும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ரஷ்யாவிற்கும் யுக்ரைனுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 13,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சமாதான ஏற்பாடுகளுக்காக 3 பிரதேசங்களிலிருந்து யுக்ரைன் வௌியேறியதுடன், சில தொடர் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.