Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா சிறுவன் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த அதிகாரிகள்-தர்மசங்கடமான நிலையில் தாய்!

சிறுவன் விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்த அதிகாரிகள்-தர்மசங்கடமான நிலையில் தாய்!

1 minutes read

தென் ஆப்பிரிக்கா செல்லும் விமானத்தில் ஏற முயன்ற பத்து வயது சிறுவன் அணிந்திருந்த சட்டையில் பாம்பு புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்ததால் அவன் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டது.நியூசிலாந்தை சேர்ந்தவர் லூகாஸ்.

மகன் ஸ்டீவ் (10). ஸ்டீவ் தென் ஆப்பிரிக்காவில் உள்ள தனது பாட்டியை காண தாயுடன் விமான நிலையத்துக்கு வந்த நிலையில்  விமானத்தில் ஏற அனுமதிக்க முடியாது என பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதற்கு காரணம், ஸ்டீவ் அணிந்திருந்த டீ சர்ட் தான், அதில் பச்சை நிறத்திலான பாம்பு இருக்கும் புகைப்படம் பெரியளவில் அச்சடிக்கப்பட்டிருந்ததாகும் சக பயணிகளுக்கு இதனால் தேவையில்லாத பயம் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர்

இது சிறுவனின் தாய்க்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது, இந்த பிரச்சனையால் விமானத்தை தவற விட வேண்டாம் என நினைத்த லூகாஸ் தனது மகன் ஸ்டீவிடன் டீ சர்ட்டை திருப்பி உள்பக்கமாக போட சொன்னார்.

டி சர்ட்டை மாற்றி அணிந்த பிறகு விமானத்தில் பயணிக்க ஸ்டீவ் அனுமதிக்கப்பட்டான், இருவரும் ஊருக்கு வந்தவுடன் இது தொடர்பாக விமான நிறுவனத்துக்கு லூகாஸ் இமெயில் அனுப்பினார்.

அதற்கு பதிலளித்த நிறுவனம், எங்கள் கவனத்துக்கு இந்த விடயத்தை கொண்டு வந்ததற்கு நன்றி.ஆடை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்னும் விரிவான காரணங்களை கேட்டுள்ளோம், விரைவில் அது தொடர்பில் உங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More