உலககோப்பையில் இன்று இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி புதிய உடை அணிந்து விளையாட உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் நீலநிற உடை அணிந்து விளையாடி வந்துள்ளன.
சர்வதேச போட்டிகளில் மோதும் இரு அணிகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்து விளைாயட கூடாது என ஐ.சி.சி விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயெ புதிய உடை அணிந்து விளையாட வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தற்போதைய நிலையில் இங்கிலாந்து அனைத்து போட்டியை நடத்தும் நாடு என்பதால் உடையை மாற்ற முடியாது.
எனவே இந்திய அணி தனது ஆடையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதுள்ளதை அடுத்தே இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்தியஅணி புதிய உடையை தேர்வு செய்த நிலையில்அது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
நடைப்பெற்ற வரும் அனைத்து போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 11 புள்ளி கணக்கில் 2 ஆம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – R. Kalaichelvan