தமிழ் என்றுமே உயிர்ப்புடன் வளமுடன் எப்பொழுதும் இருக்கும், அதை காப்பாற்றுவதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேவை இல்லை என்று தமிழக ப.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
“ஸ்டாலின் கூறுவது இது தமிழ் தாய்க்கே பொறுக்காது. தமிழ் மொழி என்றும் இளமையாக இருக்கும்மொழி. தமிழை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. தமிழ் என்றுமே உயிர்ப்புடன் வளமுடன் எப்பொழுதும் இருக்கும் அதை காப்பாற்றுவதற்கு ஸ்டாலின் தேவை இல்லை.
அத்தோடு தமிழகத்தில் இன்று நடந்து கொண்டிருக்கும் கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தி.மு.க.வை சேர்ந்தவர்களின் 2-வது கொலை இது. உட்கட்சி பிரச்சினையா என்பது தெரியவில்லை.
தூத்துக்குடியில் ஏற்கனவே இதுபோன்ற ஒரு கொலை நடந்திருக்கிறது. தற்போது திருநெல்வேலியிலும் உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலைகள் தடுக்கப்பட வேண்டும்” என தமிழிசை கூறினார்.