அரசியல் சாசன பதவியில் இருந்து கொண்டு ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்று கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சிதம்பரேஷ் பேசிய பேச்சுகள் சர்ச்சையாகி உள்ளன.
ஜாதிசங்க மாநாட்டில் பங்கேற்ற கேரளா நீதிபதி சிதம்பரேஷ், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் ஆகியோரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
கேரளாவின் கொச்சியில் தமிழ் பிராமணர்கள் சர்வதேச மாநாடு கடந்த 19-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில்தான் நீதிபதிபகள் சிதம்பரேஷும் அனிதா சுமந்தும் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் நீதிபதி சிதம்பரேஷ் பேசியதாவது:
பிராமணர்கள் பூர்வ ஜென்ம சுக்ருதத்தால் இருமுறை முறை பிறக்கின்றனர். பிராமணர்களுக்கு சிறப்பு அம்சங்களாக உயர்ந்த சிந்தனை, நல்ல குணம், சுத்தமான சைவ உணவுப் பழக்கம், கர்நாடக சங்கீதம் மீதான ஈர்ப்பு ஆகியவற்றை கொண்டவர்கள்.
நல்ல குணம் உடைய பிராமணர்கள் பிரிவினையை ஆதரிக்க மாட்டார்கள். பிராமணர்கள் எப்போதும் மதவாதிகளாகவும் இருந்ததில்லை, மக்களை நேசிப்பவர்கள், பிறருக்கு கேடு விளைவிக்காதவர்கள், அகிம்சையை கடைபிடிப்பவர்கள்.
உயர்பொறுப்பில் பிராமணர்கள் பிராமணர்களுக்கே உயர் பொறுப்பு
நல்ல காரியங்களுக்கு தாராளமாக பொருளுதவி செய்யும் பிராமணர்கள் எப்போதும் உயர் பொறுப்பில் இருக்க வேண்டும், அரசமைப்புச் சட்டப் பொறுப்பில் இருப்பதால் நான் இட ஒதுக்கீடு பற்றி கருத்துக்கூற முடியாது.அழுகிற குழந்தைதான்..
இதைப் பற்றி 161 பேர் பேசுகிறார்கள். டிஸ்மிஸ் செய்ய கோரிக்கை
சிதம்பரேஷின் இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஜாதி சங்க மாநாட்டில் பங்கேற்ற சிதம்பேஷ், அனிதா சுமந்த் இருவரையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.