உச்ச நீதிமன்றத்தால் இன்று (சனிக்கிழமை)அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இத்தீர்ப்பானது திருப்தி அளிக்கவில்லை என ஏஐ.எம்ஐ.எம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி மறுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அசாசுதீன் ஒவைசி,உச்ச நீதிமன்றம் உச்சமானதாக இருக்கலாம். ஆனால் அதன் தீர்ப்பு சரியானதென்று கூறமுடியாது என்றும்,அரசியல் சட்டத்தின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் தனமாகத்தந்துள்ள 5 ஏக்கர் நிலம் தேவையில்லை என நிராகரித்துள்ளார்.அயோத்தி வழக்கில்காங்கிரஸ் தனதுஉண்மையான நிறத்தை வெளிப்படுத்தியுள்ளது. பாபர் மசூதிக்குள் 1949-ம் ஆண்டு சிலை வைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.பாபர் மசூதியின் கதவை ராஜீவ் காந்தி திறந்து விடாவிட்டால் அது இன்று வரை மசூதியாகவே இருந்திருக்கும்என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நாம் எமது உரிமைக்காக போராடுவோம் எனவும் கூறியுள்ளார்.