நிலவின் தென்துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் தொடர்பு துண்டிக்கப்பட்டநிலையில் அந்த விண்கலத்தின் பாகங்களை கண்டுபிடித்த மதுரையை சேர்ந்த தமிழ் இளைஞர் நாசாவுக்கு உதவியுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் கணனி நிறுவனத்தில் பணியாற்றிவரும் மதுரையை சேர்ந்த பொறியிலாளரான சண்முக சுப்பிரமணியன் என்ற தமிழ் இளைஞனே அந்த பாகங்களை கண்டு பிடித்தவராவார்.
இந்நிலையில் செப்ரெம்பர் 17, ஒக்டோபர் 14, 15, நவம்பர் 1ல் நாசா வெளியிட்டபுகைப்படங்களை ஆய்வு செய்ததில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். தான் கண்டுபிடித்ததை நாசாவுக்கு இமெயில் மூலம் அனுப்பியுள்ளார். சண்முக சுப்பிரமணியனின் ஆய்வை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் உறுதி செய்து நன்றி தெரிவித்துள்ளனர்.