Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அற்றியாபுயலை அடுத்து பிரித்தானியாவை தாக்கவுள்ள பிரெண்டன் புயல்

அற்றியாபுயலை அடுத்து பிரித்தானியாவை தாக்கவுள்ள பிரெண்டன் புயல்

1 minutes read

பிரித்தானியாவின் சில பகுதிகளை அற்றியா என்னும் புயல் தாக்கியுள்ள நிலையில், மீண்டும் ஒரு புயல் தாக்கலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

அற்றியா என்னும் புயல் பிரித்தானியாவை மணிக்கு 70 மைல் வேகத்தில் வீசும் காற்றுகளால் புரட்டி எடுத்தது.ஏற்கனவே, மின்சாரம் துண்டிப்பு மற்றும் போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

வட கிழக்கு இங்கிலாந்துக்கு இன்று மதியம் வரை புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நாளை தென் மேற்கு பகுதிகளை இன்னொரு புயல் மணிக்கு 100 மைல் வேகத்தில் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Isle of Wight பகுதி கடந்த இரவில் மணிக்கு 83 மைல் வேகத்தில் வீசும் காற்றுகளால் தாக்கப்பட்ட நிலையில், அயர்லாந்திலிருந்து அடித்த புயலால், தென் மேற்கு மற்றும் வேல்ஸ் பகுதிகளையும் பலத்த காற்றுகள் தாக்கின.

அதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில், நாளை மீண்டும் பிரெண்டன் என பெயரிடப்பட்டுள்ள ஒரு புயல் தாக்கலாம் என இருப்பதாக வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More