இலங்கை கிரிக்கெட் அணித்தலைவராக எனக்கு பல பொறுப்புக்கள் இருந்தாலும், எனது முதல் பொறுப்பு துடுப்பாட்ட வீரர் என்பதே என திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் தலைவராக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் மாறியதன் பின்னர் கிடைத்த அனுபவம் குறித்து, அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
‘இது ஒரு பெரிய சவால் என்பதை நான் அணித்தலைவர் பொறுப்பினை எடுத்த போதே அறிந்து கொண்டேன். நான் நான்கு வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விளையாடாத காரணத்தினால் எனது நிலையினை அணியில் தக்கவைக்க தனி ஆளாக நான் திறமையினை வெளிப்படுத்த வேண்டும் என்பது தெரியும். அழுத்தங்களும் இருக்கின்றன.
ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக நான் நல்ல முறையில் துடுப்பாடியதில் மகிழ்ச்சி. அதோடு உலகக் கிண்ண பயிற்சி போட்டிகளிலும் நன்றாக துடுப்பெடுத்தாடியிருந்தேன். நான் இலங்கையிலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றேன்.
இதனால், எனக்கு ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாது என்பது இல்லை. உண்மையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கும், உள்ளூர் போட்டிகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருக்கும்.
இலங்கை கிரிக்கெட் அணி, இன்று (சனிக்கிழமை) பலம் பொருந்திய அவுஸ்ரேலியா அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நன்றி-Anojkiyan