ஒருவர் பல பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று மத ரீதியில் பகிரங்கமாக பின்பற்றப்படும் செயற்பாடுகள் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.
ஆட்சி மாற்றத்தின் ஊடாக அனைத்தும் திருத்தியமைக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்ற முஸ்லிம் மத சட்டங்கள் பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.
72 கன்னிகள் தேவையென்று ஒரு அடிப்படைவாதி கருதினால் நாம் அனைவரும் இறக்க நேரிடும். அடிப்படைவாதம் நாட்டில் இருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்படும்.
பல பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும் என்பதை முழுமையாக மாற்றியமைத்து அனைவரும் பொதுச் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படு வார்கள்.
இன்னும் குறுகிய காலத் துக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்களே தகுந்த பதிலடியை வழங்குவார்கள் என்றார்.