வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் முன்பாக இடம்பெற்றது.
இதன்போது பல்வேறு கோசங்களை அவர்கள் எழுப்பியதுடன், தமது பிள்ளைகள், உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உண்மை நிலையை வெளிப்படுத்தமாறு தெரிவித்து சுமார் 1 மணிநேரம் ஏ9 வீதியின் ஓரத்தில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது ஊடகங்களிற்கு அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.