Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி !!

ஈழத்தமிழர்கள் தற்கொலை முயற்சி !!

1 minutes read

இலங்கையர்கள் உள்ளிட்ட 46 கைதிகளில் 20 பேர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர்.

இச்சம்பவமானது தமிழ்நாடு – திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில்இடம்பெற்றுள்ளது.

குறித்த முகாமில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இங்கு  இலங்கை தமிழர்கள் 38 பேர் உட்பட பங்களாதேஷ், சீனா, பல்கேரியா போன்ற நாடுகளை சேர்ந்த 70 பேர்கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இலங்கை தமிழர்கள் உட்பட 46 பேர் நேற்று முன்தினம் முதல் தம்மைவிடுதலை செய்யுமாறுகோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் தங்களை கைதுசெய்து செய்ததாகவும்,வழக்கில் பிணை அனுமதி கிடைத்தும் தங்களை விடுகிக்க மறுத்துவிட்டனர் எனவும் கைதிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 46 கைதிகளில் 20 பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.இவர்கள் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More