Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் புதிய கோரிக்கை…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் புதிய கோரிக்கை…

1 minutes read

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளராக களம் இறங்கியுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

வவுனியாவில் 993 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளே இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை)  முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர்ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இக்கோரிக்கையை  தெரிவித்துள்ளனர்.

மேலும்,  சிங்கள வேட்பாளர்களுக்கு  வாக்களிக்கக் கூடாது எனவும் மீன் சின்னத்திலே போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும்,இவ்வாறு செய்வதன் மூலம் தமிழர்கள் ஒருங்கிணைந்த கொள்கையுடன் ஒன்றுபட்டுள்ளனர் என்பதை உலகுக்கு காண்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டனர்.

 

அத்துடன் கோட்டாபயவும், சஜித் பிரேமதாசவும் சமஷ்டி மற்றும் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான சிங்கள பௌத்த அடிப்படைவாதிகள் என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இக்கோரிக்கைக்கு  அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியனவும் ஆதரவு தெரிவித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More