கட்டுநாயக்க விமான நிலையத் தகவலின் படி இன்றும் நேற்றும் அதிகளவானவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் எனவும் இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்த இலங்கையர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நாடு திரும்பும் இலங்கையர்களை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சென்றுள்ளனர்.இதற்குக்காரணம் இவர்களில் பெருமளவானோர் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாயவுக்கு வாக்களிப்பதற்காக தாம் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளமையாகும்.
விமான நிலையத்தினுள் மக்கள் வெற்றி கோஷம் எழும்பி கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்களை வரவேற்றுள்ளனர்.
இது அனைத்தும் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிறுத்தியே இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.