இலங்கையில் கடந்த சில நாட்களாக கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் வளிமண்டலத்தில்தூசு துகள்களின் செறிவு அதிகரித்திருந்தது.
இவ்வாறு ஏற்பட்டவதற்கு காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வடக்கு திசையில் இருந்து வீசிய கற்று என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.இலங்கையின் வளி தர குறியீடு 150 வரையில் அதிகரித்திருந்ததாக கூறப்பட்டது.
மேலும் இந்நிலையானதுதற்போது சீரடைந்திருப்பதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதே நேரம் டெல்லியில் ஏற்பட்டிருந்த வளி மாசுவினாலேயே இலங்கையிலும் அந்த நிலைமை ஏற்பட்டது என்று கூறுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலை ண்டும் எதிர்வரும் 13ம் திகதி எற்படக்கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவை உறுதியானவை அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.