Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி..

வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி..

1 minutes read

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

குறித்த விபத்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முறிப்பு பகுதியில் அமைந்துள்ள பாடசாலைக்க முன்பாக இடம்பெற்ற குறித்த விபத்தில் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதான இராசரத்தினம் சந்திரகுமார் என்ற குடும்பஸ்தர்  ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.

பரந்தனிலிருந்து முறிப்பு பகுதியில் அமைந்துள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கப் ரக வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

வாகனத்தை செலுத்திய சாரதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More