சஜித்தை வெற்றிபெற வைக்க தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று(புதன் கிழமை)பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சில விடயங்களை துணிச்சலாக சொல்லியுள்ளார்.
எனினும், அவர் அதை செய்வாரா இல்லையா என்பது தெரியாது. தெற்கு நிலவரங்கள் அவர் வெற்றிபெற மாட்டார் என்று சொல்கின்றன. தமிழ் மக்கள் வாக்களித்து அதை மாற்ற வேண்டும்” என, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவில் நாம் மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்கிறார்கள்.ஆனால் “அரசியல் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினரை ஒரு வருடத்துக்குள் விடுவித்துள்ளோம். மேலும் பல செயல்திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்,என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த நிலைமையை மாற்ற தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து வாக்களிக்க வேண்டும், ஒன்றுமையான வாக்களித்து சரித்திரத்தை உருவாக்குங்கள். அன்னத்துக்கு வாக்களித்து அந்த வெற்றியை உங்கள் பிரதிநிதிகளான எங்கள் கையில் கொடுங்கள். நாங்கள் உங்களை பார்த்துக்கொள்கின்றோம்” என்றார்.