ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் வன்முறை செயல்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கோலையில் வேட்பாளரின் ஆதரவாளர்கள் வாக்களித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமது வேட்பாளருக்கு வாக்களிக்காத காரணத்தால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது வீட்டினுள்புகுந்த சிலர் ஆண் ஒருவரை கத்தியால் வெட்டியதுடன் மேலும் சிலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவகம் தெரிவித்தது.