நேற்றைய தினம் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சில பகுதிகளில் சஜித் முன்னணிவகித்து வருகின்றார்.
அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அதற்கமையதிருகோணமலை தேர்தல் தொகுதியில் சஜித் பிரேமதாச – 166,841வாக்குகளை பெற்றுக்கொண்டதுடன் கோட்டாபய ராஜபக்ஸ – 54,135வாக்குகளை பெற்றுள்ளார்.
மேலும் திருகோணமலை சேருவில தொகுதியில் கோட்டாபய ராஜபக்ஸ – 31,303வாக்குகள் பெற்றுள்ளார்.அதே வேளை சஜித் பிரேமதாச – 28,205வாக்குளை பெற்றுள்ளார்.
இருப்பினும் சஜித் பிரேமதாச அதிக வாக்குகளை பெற்று திருகோணமலை மக்களின் அநேக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.