வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று மாசு கொழும்பு நகரை மிகவும் தாக்கிய நிலையில் அந்நிலை மீண்டும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரை அண்மித்த வளிமண்டலத்தில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் இன்று காலை 6 மணி தொடக்கம் 10 மணி வரையான காலப்பகுதியில் காற்றில் 150 புள்ளியாக தூசு துகள்களின் தரச்சுட்டி காணப்பட்டதாக அந்த நிறுவகத்தின் சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் சரத் பிரேமசிறி குறிப்பிட்டார்.
இந்த காலப்பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்தமையும் இதற்கு காரணம் என சரத் பிரேமசிறி தெரிவித்தார்.