தாயக விடுதலை போரில் உயிர் நீத்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று மாலை மூன்று மணியளவில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜா தலைமையில் இடம்பெற்றது
நிகழ்வில்
முன்னாள் வடக்குமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கலந்துகொண்டிருந்தார் . இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பொது உருவ படத்திற்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது, நிகழ்வில் தாயக விடுதலைப்போரில் உயிரிழந்த வீரர்களிற்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது வீரர்களின் பெற்றோர் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் மாவீரர்கள் நினைவாக மரக்கன்றுகளும் சிறு நினைவுப் பொருளும் வழங்கி வைக்கப்பட்டது.