புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.இக்கூட்டமானது ஜனாதிபதி செயலகத்தில் இன்று(புதன்கிழமை) பிற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
இதில் இடைக்கால வரவு செலவு திட்டம் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.புதிய அரசாங்கத்தின் அனைத்து பிரிவுகளினதும் நிர்வாக கட்டமைப்பு மற்றும் அதன் செயற்திறன் தன்மை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து புதிய அமைச்சரவைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுப்படுத்தவுள்ளாரென கூறப்படுகிறது.