Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவீரர் சிறப்பு நிகழ்ச்சியில் இராணுவ உறவுகள் புறக்கணிப்பு!!

மாவீரர் சிறப்பு நிகழ்ச்சியில் இராணுவ உறவுகள் புறக்கணிப்பு!!

1 minutes read

மாவீரர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளில்  மாவீரர் நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் அம்பாறை, கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவுகூரல் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வு அம்பாறை கஞ்சிகுடியாறு மாவீரர் துயிலும் இல்ல ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் நாகமணி கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இன்று (புதன்கிழமை) மாலை 6 மணி 5 நிமிடத்தில் ஏரம்பு செல்லம்மா என்ற நான்கு மாவீரர்களின் தாயார் பிரதான ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார். இதையடுத்து ஏனையவர்களும் சுடரினை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இராணுவத் தரப்பினர் மற்றும் பொலிஸார் உறவினர் கொண்டு வந்த மாவீர்களின் உருவப்படங்களை துயிலும் இல்லத்திற்குள் எடுத்துவர அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு கீதங்களும் இசைக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நினைவுகூரல் இடம்பெற்றுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More