ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது வெளிநாட்டு பயணதில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன புறக்கணிக்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய விற்கும் தினேஷ் குணவர்தனவிற்கும் முரண்பாடுடா எனும் கேள்வி எழுந்துள்ளன.
இலங்கையின் ஜனாதிபதி ஒருவர் தனது முதல் வெளிநாட்டு விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொள்வது சம்பிரதாயமாக இருந்தது.
இருப்பினும் புதிய ஜனாதிபதி கோட்டாபயவின் முதலாவது வெளிநாட்டு பயணத்தில் புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சேர்த்துக்கொள்ளப்படாமை தொடர்பாக தற்போது விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவுக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றபோது அப்போதைய வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர கலந்துகொண்டிருந்தார்.
அதேபோல 2015இல் ஜனாதிபதியாக தெரிவான மைத்திரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு பயணதில் அப்போது வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீரவும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் புதிய ஜனாதிபதி கோட்டாபயவின் முதல் வெளிநாட்டு பயணத்தின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.