Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தொலைபேசியை பயன்படுத்துவோருக்கு வரப்போகும் ஆபத்து!!

தொலைபேசியை பயன்படுத்துவோருக்கு வரப்போகும் ஆபத்து!!

1 minutes read

இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொபைல் நிறுவனங்கள் ஊடாகத் திரட்டப்பட்டு வருகின்றன.

அத்தகையவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உங்களுடைய போனில் உள்ள சிம் அட்டை உங்கள் பெயரில் இல்லாவிட்டாலோ, உங்கள் பர்ஸ்ஸில் வேறு பல சிம் அட்டைகள் இருந்தாலோ, உங்கள் போனில் சந்தேகத்திற்கு இடமான போட்டோக்கள், வீடியோக்கள், ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருந்தாலோ உங்களுடைய கையில் உள்ள போன் உங்களுடையது தான் என்பதற்கான ஆதாரத்தைக் காட்டும்படி கேட்கப்பட்டு நீங்கள் அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ நீங்கள் உடனடியாகச் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட முடியும்.

சிம் அட்டைகள் வாங்கும்போதும் நம்பிக்கையான இடத்தில் வாங்குங்கள்.வாங்கும்போது உங்கள் அடையாள அட்டையின் பிரதியைக் கொடுக்க வேண்டி வரும். அந்த அடையாள அட்டைப் பிரதியின் மூலம் வேறு நபர்களுக்கும் சிம் அட்டைகள் விற்கப்பட முடியும்..

இந்த எல்லா விடயங்களிலும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More