மார்ச் மாத தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற அமர்வினை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார்.
இதேவேளை எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தை கலைத்து அதன் பின்னர் ஏப்ரல் மாத இறுதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுப்பார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.