ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வரி நிவாரணம் பொது மக்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்துள்ளதா என்பதை கண்டறியுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானத்தை கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் தொழில் வாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும் இதன் பாது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து விசேட வரி சலுகைகள் அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.